காற்றில் அலையும் கனவுக் குழந்தைகள் ..  

Posted by நாண்

ஒரு அலைபேசி அழைப்பில்தான்
துவங்கியது நம் காதல்...
அடுத்த அழைப்பில்  நானும் நீயும்
கணவன் மனைவியானோம்..
தொடர்ந்த அழைப்புகளில் நம் 
உடல் வேட்கைகளாலும்
வெப்ப வார்த்தைகளாலும்
நிரம்பி வழிந்தது....
நம் கனவுப் படுக்கை அறை..
மூன்று குழந்தைகளுடன்
வாழ்வின் எல்லா அடுக்குகளையும்
மகிழ்ச்சியால் திளைக்க வைத்தோம்..
நம் குழந்தைகள் பள்ளி சென்ற ஒரு
சுப தினத்தில் என் அலைபேசி அழைப்புடன் 
நம் காதலும் உன்னால் துண்டிக்கப் பட்டது..
அனாதைகளாய் காற்றில் மிதந்து
திரிகின்றன நம் குழந்தைகள் ...

This entry was posted on Monday 30 May 2011 at 05:59 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment