பெண் விடுதலை ..அப்படின்னா..??  

Posted by நாண்

பெண் விடுதலை குறித்தான தொடக்க கேள்விகளிலேயே ஆண்களின் வலைப்பின்னல் சூத்திரத்தால் அது நீர்த்து போகவே செய்கிறது..
                                                                                                                                                                             துவக்கத்தில் பெண் வழி சமூகமாக இருந்த நமது நாகரிகம் ஆண் வழி சமூகமாக நீண்டு ..ஆண்களின் ஏகோபித்த விடுதலைக்காகவும் இன்ன பிற சமூக குடிகள் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமும் பெண்களுக்கான வரையறைகளை கட்டமைத்து அதன் விடுதலை பற்றிய நீண்ட விவாதங்கள் தொடர்ந்து கிளம்புகின்றன..                                                                                                        
ஆனால் இன்று பரிமானமடைந்திருக்கும் விடுதலையின் வேட்கையானது பெண்களின் உடையிலேயே முடிந்து போகிறது என எண்ணுகிறேன்..
                               
''நீச்சலுக்கு செல்லும் பெண் நீச்சல் உடை அணியாமல் சாரியா க...ட்ட முடியும்? கடற்கரையில் ஒரு பெண் நீச்சல் உடையில் இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? கடலில் நீந்தவும் குளிக்கவும் அதுதானே வசதியானது? அது எப்படி ஆபாசமாக - கலாசாரத்திற்கு எதிராக முடியும்? தமிழ் ஆண்கள் வேட்டி கட்டிக்கொண்டா அலைகிறார்கள் இல்லையே. ஆண்கள் மட்டும் விதவிதமாக மேற்குலக ஆடைகளை அணியலாம், பெண்கள் மட்டும் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும். ஆண்கள் வசதியாக எல்லா ஆடைகளையும் கழட்டி விட்டு சிறு காற்சட்டையை அணிந்து கொள்ளலாம் ஆனால் பெண்கள் மட்டும் வேகாத வெயிலில் பொசுக்கும் வெப்பத்தில் மீட்டர் கணக்கில் சாரியை உடலில் சுற்றிக்கொள்ள வேண்டும். கலாசார காவலர்களே இது என்னப்பா நியாயம்?''என எமது நண்பர் ஒருவரின் எழுத்தின் வழியே தான் எனக்கும் இது தோன்றியது..                                                                                                                             
ஆசிய கண்ட பெண்களுக்கு உடைகள் விடயத்தில் ஒரு தனித்துவ மேன்மை வெவ்வேறு இனங்களுக்குள் வேறு மாதிரியாக இருந்தாலும் ஆனால் பெண்களே கலாச்சார உடையணிய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.. என்கிற மாயை இருக்கிறது..எனக்கு தெரிந்து இதில் நான் வேறுபடுகிறேன்..நமது கலாச்சாரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதே..ஆனால் பெண்களின் மீது மட்டும் அது விடிய பல காரணங்கள் இருக்கின்றன..                       
                                                                                 ஆசிய கண்டத்தில் எவ்வளவு ஆணாதிக்கம் மிகுந்திருந்தாலும் ஆணேஅதிகாரத்தை செலுத்தினாலும் நமது தொல் குடியின் பெண் வழி சமூக நிலையே இன்னமும் இங்கு நிகழ்கிறது..பெண்களே சமூக நிலையை உள்ளோடி நிர்ணயிக்கிரவர்களாகவும் ஆண் அதிகாரத்தின் பின்னிருந்து இயக்கம் சக்தியாகவும் எமக்கு படுகிறது..அதே சமயம் ஒரு படி நிலையில் பிறப்பு முதல் இறப்பு வரை ஏதாவது ஒரு ஆணை சூழ்ந்தே அவள் இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது..அதற்க்கு நம்முடைய முன்னோர்களே அழுத்தமான காரணிகளாக இருக்கின்றனர் .குழந்தை திருமணத்தின் மூலம் அவளின் உரிமைகள் மறுக்கப்பட்டு அதுவே நெடிய பிற்போக்குதனங்களுக்குள் அவளை அடைத்திட முதல் காரணியாக அமைந்தது..இது மேல் தட்டில் மட்டுமல்ல தலித் முதலான ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் இப்படியே..சாதியாலும் ,உடமை மறுப்பாலும்,அதிகார மறுப்பாலும் பெரும் அவதிக்குள்ளானது பெண்களே..இந்தியா போன்ற நாடுகளில் புரட்சியின் வடிவம் சுருங்கி போனதற்கு பெண் விடுதலையை ஊக்கப்படுத்ததது மிக முக்கியமான காரணம்.
                                                                                                    
.நமது பெரியார் இங்கே பெண் விடுதலை குறித்து பேசும்போது மேலை நாடுகளில் பெண்களுக்கான விடுதலை ஓரளவு நிகழ்ந்தே இருந்தது..அங்கே பெண்கள் அதனாலேயே நுகர்வு கலாச்சாரத்தின் மிக பெரிய வளர்ச்சி நிலையிலும் தங்கள் விடுதலையை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது..    மேலை நாட்டு பெண்கள்   நீண்ட பாரம்பரியத்தை சுமந்தும் அதிலிருந்து பெண்களுக்கான விடுதலையை நோக்கி முன்னேறியும் ,அவர்கள் எல்லா சமன் பட்டியலை கற்றபிறகு நிகழ்ந்த பொது தன்மை அதுவென நினைக்கிறேன்,,அதற்க்கு முன்பாக பல நூறு ஆண்டுகள் மேலை நாட்டு பெண்களும் தங்களுடைய சமநிலைக்கான விடுதலையை வென்றெடுத்த பிறகே .. இன்று நீங்கள் பேசும் பொது தன்மைக்கு மாறி இருக்கிறார்கள்.              
                                                                                                         .    ஆனால் இங்கே நடப்பது வேறு..அவர்களுக்கான சமன் பாட்டியல் பற்றிய அக்கறை இல்லாத ,சின்ன சின்ன முணுமுணுப்புகளை தவிர ஏதும் பெண்களுக்கு ஆதரவாக நிகழ்ந்து விடாத சூழலில் காலனியை விட்டு ஓடிய நாட்டாமைகள் அங்கிருந்த படியே நவகாலனியின் மூலம் இங்கே ஆதிக்கம் செலுத்த வணிகத்தை பரப்ப முகப்பூச்சிளிருந்து ஜட்டிவரைக்கும் பெண்களை மாடலாக தேர்ந்தெடுத்தனர் 
                                                                                                                                               ..இங்கிருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்குமான இயங்கியல் கவர்ச்சியை பெரிது படுத்தி அழகை மூலதனமாக்கி,வெள்ளைத் தோலை சிறந்ததாக மாற்றி அவர்களின் வணிக மனோபாவத்திற்கு வளரும் நாடுகளை இறையாக்க திணிக்கப்பட்ட உலகமயமாக்கலால் மேலும் பெண் உடல் மீதான வேட்கையை செலுத்தி ,ஆசிய நாடுகளை மயக்கி வைத்திருக்கின்றன ..இதன் மூலமாக இந்த பண்பாட்டியல் வளர்ச்சிகள் பெண் விடுதலைக்கு பதிலாக பெண் மீதான இனக்கவர்ச்சி மாயாத்திர்க்குள்ளேயே சிக்க வைக்கின்றன..                            இந்த ஊடக வன்முறை மூலம் பெண்களின் மீதான உடை நெகிழ்வுகள்  கூட ஆண்களை தூண்டி விட எதுவாக குறிப்பாக இந்திய திரைப்படங்கள் உருவாக்கிய நுகர்வு தன்மைக்கு பெண்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.                                                                                 .உலகெங்கிலும் பெண்கள் விளம்பர போக பொருளாக பயன்படுத்தப்பட்டாலும் சூழல்கள் வேறு வேறாக இருந்தன.கல்வி,வேலை,அதிகாரம் என ஆசிய பெண்கள் கண்டடையும் முன்னே மிக பெரும் வணிக பொருளாக பெண் மாற்றப்பட்ட படியால் உண்மையான விடுதலையை நோக்கி நகர்வதர்க்குள் உடை மீதான (அதுவும் குறிப்பான வணிக உத்தி)விடுதலையில் பெண்கள் நகர்ந்தது அல்லது நகர்த்திய காரணிகள் சிலவால் தேங்கி நிற்கிறது..உடை விசயத்திற்கு பேசுவதை விட அரசியல் அதிகாரத்தை சமன்படுத்த ,பகிர்ந்து கொள்ள தூண்டப்படுவதில்லை பெண்கள் என்பதை கவனித்தாலே..இதும் ஆண் செலுத்தும் வணிக உத்தியில் பெண்களை மடை மாற்றுவதே..                                                                                           ஆண்கள் இந்திய ,ஈழ சூலில் வெறும் கோவணம் கட்டி  பெண்கள் மத்தியில் நடமாடும் நிலை இருந்தது..ஆனால் இன்று நுகர்வின் பெரும்பகுதி பெண்ணை மையப்படுத்தி இருப்பதாலும் ஊடக பாலியல் வன்முறை நடப்பதற்கு முன் காலங்களிலேயே பெண் ஆணுக்கு நிகரான விடுதலை மனோபாவத்தை உருவாக்க முடியாமல் போன தொல்வியாலுமே இது தொடர்கிறது என நினைக்கிறேன்..                                                                                                                           இதை உடைக்க என்ன வழி என்றும் நான் யோசித்து குழம்பியாயிற்று,,நடக்கிற இந்த மாற்றங்களோடு பாலியல் உணர்வை கடந்து நிற்கிற மனநிலைக்கு எப்படி தயாராக முடியுமென தெரிய வில்லை..                                                         பெண் விடுதலைக்கான மாற்றம் இத்தகையே நெருக்குதல் களோடுதான் நிகழுமெனில் அதை உள்வாங்கி கொள்ளத்தான் வேண்டும்..அல்லது ஒரு சர்வ வல்லமை படைத்த அரசு அதிகாரத்தின் மூலம் அது தன நேர்மையை இழக்காமலும்,கொள்கை உறுதி மூலமும் ,பெண் விடுதலையை வென்றெடுக்க வேண்டும்..ஒரு தலை முறை மாற்றத்திற்கு பிறகு அந்த சர்வ வல்லமையும் தகர்ந்து போக வேண்டும்.                                                                                                                                                     
.இது சாத்தியமா இல்லையோ..இது போன்றதொரு நடவடிக்கைகள் நிகழ வில்லையெனில் ஆண்களை உருவாக்கி வைத்திருக்கும் பன்னாட்டு கம்பனிகளின் வியாபார தந்திர வெற்றியை (பெண் மீதான நுகர்வு )ருசித்த படியே தான் ஆசிய கண்ட பெண்களின் விடுதலை நிகழும்..அது எல்லா கட்டுடைத்தலையும் நிகழ்த்துவதான மாயையில் பிற்போக்கை நோக்கி மேலும் நீளும்..அதோடு பெண் விடுதலை குறித்து ஆண் விவாதிப்பதே தவறு பெண்களையே விவாதிக்க விடும்போதுதான் உண்மையின் எல்லையை தொடும்..இல்லையெனில் ஆண்களான எங்களுக்குள் பெரியாரை(அதிலும் ஆண்)  படித்திருந்தாலும் கூட முழுமையான விடுதலைக்கான பாதையை பெண்களுக்கு விடுவோம் என்பது மாயையே..அப்படி ஆண்கள் சொல்வதும் ஒரு தந்திரமே..
உங்களிடமிருந்து வேறு சரியான சாட்டையடிகளை எதிர்பார்க்கிறேன்....

This entry was posted on Thursday 26 May 2011 at 16:22 . You can follow any responses to this entry through the comments feed .

1 கருத்துரைகள்

கவனத்தில் கொள்ளவேண்டிய பதிவு.பெண்களின் மிகப் பெரும் சாபம் மதத்தின் பெயரால் அலையும் கலாச்சாரக் காவலர்களே.இதில் பெண்களின் பங்கும் உண்டு.ஐ.பி.எல். தொடரில் பெண்களே உரிமையாளராய் இருக்கும் அணியில் சியர் கேர்ள்சின் ஆட்டம் கொடுமை....பின்னர் பெண்ணியம் பேசக் கூட ஆண்கள் தான் வர வேண்டும் போல.

28 May 2011 at 09:41

Post a Comment