பூச்சாண்டி 4  

Posted by நாண்

தமிழ் நாட்டின் தற்போதைய ஒரே ஒரு முக்கியமான தலைப்பு செய்தி... உடனே நீங்க அதீதமா கற்பனை குதிரைய கண்டமேனிக்கு ஓடவிட்டு பரபரப்பா யோசிக்காதிங்க..
                                     
                       முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் பிரச்சனைய தீர்க்க நடவடிக்கை எடுத்திருப்பாங்க போல அப்புடினோ , கனிமொழி தன் தவறை ஒத்துக்கிட்டு தண்டனையை அனுபவிக்க தயாராயிட்டாங்க அப்புடினோ, சோனியாவையும் ராஜபக்சேவையும் ஐ நா சபையில நிப்பாட்டி நார் நாரா கிழிச்சுட்டாங்க அப்புடினோ அதிமுக்கியமான  செய்தியை எல்லாம் நான் சொல்லமாட்டேன்.. இதெல்லாம் நடக்காதுன்னும் , ஒரு வேலை நடந்தா அன்னிக்கு உலகம் கண்டிப்பா அழிஞ்சுபோயிடும்னும் எனக்கும் தெரியும்..


                                                  இது அதை எல்லாம் விட முக்கியமான ஆனா கொஞ்சம் சோகமான செய்தி.. கிட்டத்தட்ட தமிழ்நாடே முக்கி முக்கி மூச்சு விடாம ஒப்பாரி வைக்க வேண்டிய பெரிய சோகமான செய்தி.. உடனே பரபரப்பா மறுபடியும் ஈழ மக்கள் பிரச்சனை போலன்னு யோசிக்காதிங்க.. அப்புடியான செய்தியாவே இருந்தாலும் நாம எதுக்கு அழப்போறோம்.. நாம எல்லாம் தமிழனுங்களாச்சே.
அதும் இந்தியாவ சேர்ந்த தமிழ்நாட்டு தங்க தமிழனுங்க வேற.. நாமளாவது..
தமிழன் செத்தா அழுகுறதாவது?  அப்புடியான சிரிப்பு செய்தியெல்லாம் இல்ல.. இது ரொம்ப சீரியஸ் செய்தி... ஐயோ அழுவுங்கப்பா.. அழுதுகிட்டே கேளுங்க.. நம்ம ஒப்பற்ற ஒரே தலைவர் ரஜினிகாந்த் உடல் நிலை சரி இல்லாம   ஆசுப்பத்திரியில இருக்காரு... எப்புடி அழுகை வருது... இப்ப சொல்லுங்க இதைவிட முக்கிய சோக செய்தி உலகத்துல இருக்குதா? உடனே
நீங்க செய்யவேண்டியது ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் அழிக்கிறதுதான்... முடிஞ்சா இந்த உலகத்தையே அழிச்சா கூட சந்தோசம்.. எது?! போடா(...................) வா?! இப்ப எதுக்கு என்னை இவ்வளவு கேவலமான வார்த்தையில என் பரம்பரையவே தோண்டி எடுத்து திட்டுறீங்க?! எங்க அண்ணன் தம்பிக எல்லாம் செஞ்சுருக்கிறதை பாருங்க.. என் பேச்சு எவ்ளோ  சரின்னு உங்களுக்கே தெரியும்...
                                                                
வீட்டுல கஞ்சிக்கே வக்கில்லேனாலும் பத்து வட்டிக்கு கடன் வாங்கி தலைவர் படம் நூறுநாள் ஒடனும்னு பாலாபிசேகம் செஞ்சவுங்க இப்போ ஒரு படி மேலே போயி ஏழு மணி நேரம் யாகம் செய்றாங்க.. அம்மாவுக்காக அரை கிலோ மீட்டார் தூரம் கடைக்கு போயி மாத்திரை மருந்து வாங்கி தராதவன் தலைவர் சரியாகனும்னு 1305 படிக்கட்டுகளை முட்டி போட்டு ஏறி பிரார்த்தனை பண்றான்.. 
                                                           
   உள்ளூர்ல  சொந்த அண்ணன் தம்பிகளை (தலித்துகளை) தேரை தொட விடாம விரட்டி விரட்டி வெட்டிபொட்டவன் தமிழையே தப்பு தப்பா பேசுற எவனோ ஒருத்தனுக்காக வெள்ளித்தேர் இழுக்கிறான்... வீட்டுல பொண்டாட்டி புள்ளைங்களுக்கு சுடு தண்ணி கூட வச்சு தராதவன் அவர் சரியாகனும்னு தீச்சட்டி  எடுக்கிறான்....  
                                                               
இவனுங்க போதாதுன்னு எங்க அக்கா தங்கச்சிக ஒரு படி இன்னும் மேல போயி கோயில்ல சிறப்பு பிரத்தனை பண்ணி விரதம் இருக்கிறாங்க..
                                                           
இப்ப சொல்லுங்க இவனுங்ககிட்ட எல்லாம் தமிழ் விடுதலை, தமிழர் விடுதலைன்னு  பேசுறவன் பைத்தியக்காரன் தானே... கொத்து கொத்தா ஈழத்தில் செத்து விழுந்தப்போ கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிச்சு ஒட்டக்கூட நாதி இல்ல...இருக்குறவன் பூராம் சொந்தங்களை தொலைச்சுட்டு நிக்கிறானேன்னு அழுதததும் இல்ல..எந்த போராட்டத்துக்கும் வந்தது இல்ல..நம்ம எல்லாம் போராடுவோம்னு நினைச்சு தீக்குளிச்சு செத்தவன் வீடு பக்கம் கூட போகல...
                                                             
  இவன் உழைப்பால கிடைச்ச கொஞ்ச பணத்தையும் டிக்கெட் எடுத்து வாழ வச்சதோட நிறுத்திக்கல.. இன்னும் இன்னும் நிறைய குடுக்கனும்னு எப்புடி அலையுறான் பாருங்க.. உடம்புக்கு சரி இல்லாம போவது இயற்கை.. பணம் இல்லாதவனுக்கு வேணும்னா பிழைக்கிறது சிரமமா இருக்கலாம்.. தேவைக்கு அதிகமா பணம் இருக்கிறவன்
தானே சாகுறேனு சொன்னாலும் மத்தவன் பொழைக்க வச்சுடுவான்....
                                                                 
  ஏதோ ரஜினி என் சாப்பாட்டுல மண்ணை அள்ளி போட்டுட்டார் போலன்னோ , அவர் மேல எனக்கு தனிப்பட்ட கடுப்புன்னோ, வயித்தெரிச்சல் பிடிச்சோ நான் இதை பேசல..அவர் தொழிலை அவர் செய்தார்.. அதற்காக எல்லாம் அவரை  என் தலைமுறையின் தலைவனாகவோ, கடவுளாகவோ நம்மால் கொண்டாட முடியாது.. ஒரு சக மனிதனாக  அவர் உடல்நலம் குன்றியமைக்கு வருந்தலாம்.. அவ்வளவே...
                                                                     ஏற்கனவே தமிழனை இருக்கிற நாயி நரி எல்லாம் ஏறி மேஞ்சுக்கிட்டு கிடக்கிற இந்த சூழலிலும் இப்படியான வேலை செய்றவனை என்ன  செய்யலாம்? தயவு செய்து மக்களே .., இது போன்ற முட்டாள்களை எங்கேனும் சந்திக்க நேர்ந்தால் யோசிக்கவே வேண்டாம்.. நங்கு நங்குன்னு நாலு கொட்டு வைங்க.. நாலு அரை அறைய முடிஞ்சா இன்னும் சந்தோசம்... இவனுங்களை இப்புடியே விட்டா நாளைக்கு ரஜினிய சாமியாக்கி நம்ம இனத்தை இன்னும் கூடுதலா அசிங்கபடுத்தினாலும் கூட  ஆச்சரியப் படுறதுக்கில்ல....  

                                         

This entry was posted on Monday 30 May 2011 at 13:37 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment