பூச்சாண்டி 3  

Posted by நாண்

சந்தித்து நாட்களாயிற்று.. அதனால் என்ன? உமக்கும் எமக்கும் சிந்தை குறையப் போவது இல்லை.. பேச வேண்டியது பேசுவோம்..
என்ன செய்யலாம்? அல்லது., என்ன செய்ய முடியும்?
அதற்கு முன் என்ன செய்திருக்கிறோம் என்பது பற்றி பேசுவோம்..
கருணாநிதி எனும் இருமுனை கத்தியை மழுங்கடித்து, ஜெயலலிதா எனும் 
குத்தீட்டியை தேர்வு செய்திருக்கிறோம்.. அவ்வளவே.. இரண்டும் நமக்கு எதிரான மாபெரும் ஆயுதங்கள் என்பது மட்டும் நினைவிருந்தால் போதுமானது..
நாமும் ஆயுதமானால் அன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது தோழர்களே..
இது வரை நாம் கண்ட களம் சத்தங்கள் மட்டும் கொண்டது.. சில நேரங்களில் சத்தங்கள் எதிராளிக்கு சங்கீதமெனவும் தோற்றம் தரக்கூடும்.. (நம் கதறல்களும் இதில் அடங்கும்)   போதும் தோழர்களே..அழுது, அரற்றி, கூச்சலிட்டு, உரக்கப்பேசி.. என்ன முடித்திருக்கிறது?! எதுவும் இல்லை.. ஆகவே நண்பர்களே.,  
இனி பேசி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்பது தெளிவு.. ஆனாலும் கூட பேசியே ஆகவேண்டும் சிலவற்றை மட்டும்..  அவை..,எதிரிகளோடு சமர் புரிய தேவையான களங்கள் மற்றும் அவை குறித்த நம் வியூகங்கள் என்பதாக மட்டும் இருந்தால் நன்று.. இனி நாம் எல்லோரும் கலந்தே பேசப்போகிறோம்.. பேசுவோம்.. நன்றி..

This entry was posted on Saturday 21 May 2011 at 13:08 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment