பூச்சாண்டி பக்கங்கள்..  

Posted by நாண்

உலகமெங்கும் விரவி கிடக்கிற எம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு பூச்சாண்டி வணக்கங்கள்... எமக்கு கூறப்பட்ட வரையில் பூச்சாண்டி என்பவன் அரூபம்.. உருவமில்லா பூச்சாண்டிக்கு பயந்த நாட்கள் கணக்கில் அடங்காது.. நிதானத்தோடு நோக்கினால் பூச்சாண்டி ஒரு அவதாரம் என்றே தோன்றுகிறது...
அம்மாக்கள் மூலம் நமக்குள் இறங்கிய பூச்சாண்டி நாம் தவறுகள் செய்யும் தருணத்தில் நம்மை திருத்தவே பயன்பட்டிருக்கிறான்.. நவீனங்கள் நம்மை விழுங்கிய போதும் பூச்சாண்டி மட்டும் இன்னும் அப்படியே மாசற்று நிற்கிறான்..
எல்லோருக்குள்ளும்  உறங்கி கிடக்கிற இந்த பூச்சாண்டியின் நிதர்சன பக்கங்களுக்கு உங்களை வரவேற்கிறேன்.. நான் பூச்சாண்டி.. நீங்களும்தான்.. நிறைய படிப்போம்.. கூடவே தவறான மனிதர்களை அடிப்போம்.. வாருங்கள் களமிறங்குவோம்...


This entry was posted on Saturday 9 April 2011 at 03:33 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment