தெய்வ திருமகள் ..வனத்தில் முளைத்த பட்டாம்பூச்சிகள்..  

Posted by நாண்

     மூன்றாம் பிறை,மீண்டும் ஒரு காதல் கதை,அஞ்சலி,சின்ன புள்ள ,ஆவாரம்பூ ,நந்தலாலா ..என நீளுகிற ஒரு வகை கதையாடலில் தெய்வ திருமகளும் ஒன்று..குறை மூளையோ,அல்லது,மனப்பிறழ்வின் மூலமாக சிவைதடைந்த மனிதனின் நேயங்களை அவனது உலகத்தையும்,அவர்களை புறம் தள்ளும் சமூகத்தின் உச்ச மனநிலை குறித்தும் சிலாகிக்கிறன நாம் மேலே சொன்ன திரைப்படங்கள்..
                         ஆனால் இன்றைய சமூக மனிதனின் மனபோக்கெங்கும் நந்தலாலாவோ,தெய்வ திருமகளோ,..தனக்கு தேவையற்ற சினிமாவாகவே நினைக்கிற தன்மை உருவாக்கப்பட்டிருக்கிறது..பழைய நகைசுவை நடிகர்கள் யாவரும் யாரிடமும் அடிவாங்கி கொண்டே இருப்பவர்களாக இருந்ததில்லை..கோண மூஞ்சி,கருப்பானவன்,ஒல்லியானவன்,கிறுக்குத்தனமாக நடந்து கொள்பவன்   ,ஏதாவது செய்து விட்டு அடிவாங்குபவன் என்பவர்களாக  கட்டமைக்கப்படும் காலம் கவுண்டமனியிளிருந்து அழுத்தமாக பார்வையாளனுக்குள் பதிவாக துவங்குகிறது.....
                         சமூகத்தின் கோமாளித்தனங்களை கிண்டல் அடித்த  நகைசுவை நடிகர்கள் இன்று சமூகத்தின் கோமாளிகளாக மாறிய பின்பு நிகழும் தமிழ்  திரையில் ,தெய்வ திருமகளில்  கொஞ்சம் அழுத்தமான காட்சிகளை, வாழ்வியலை காட்டும் போது  அது அழுப்புட்டுவதாக கிண்டல் அடிக்கிறான் பார்வையாளன்..
                    சரி தெய்வ  திருமகளுக்கு வருவோம்..
தெய்வ திருமகளுக்கு பெயர் மாற்றிய புண்ணியவான்கள் படத்தை பார்த்து விட்டு கூனி குறுகட்டும்.போற்றி பாடடி பெண்ணே.. பாடலை கொண்டாடி தென் மாவட்டங்களில் சாதியை வளர்த்த சமூகம், ஒரு தேர்ந்த படத்தை பெயர் மாற்ற துடித்த கேவலத்திற்கு பதில் என்றுமே சொல்லாது..
                     தெய்வ திருமகளை i am sam ன் பிரதி என்று சொல்லலாம்..இங்கே இயக்குனர் விஜய்க்கு ஒரு சின்ன குட்டு..மூல படைப்பாளியிடமிருந்து  அறிவு திருட்டுக்கு செய்தமைக்கு அந்த படைப்பாளிக்கு ஒரு நன்றியை அறிவிக்கும் நேர்மையில் உங்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லாமல் போனது..அதற்க்கு நீங்கள் மனம் குறுகி நிற்க த்தான் வேண்டும்..மேலும் வழக்குரைஞ்சர்கள் எல்லோரையும் பார்ப்பானாக காட்டுவதும்,அவன் எல்லோரையும் எப்போதும் ரட்சிப்பான் என்பதும் உங்கள் மடமையும் உச்ச புள்ளி..

                    ஒரு அற்புதமான உலகத்தின் நியாங்களை ,பேரன்பை,அதை பார்வை கருவியாக்கி தமிழர்களுக்கு கொடுத்ததற்காக அதையும் மன்னிக்கிறேன்..இவ்வளவு அழகாக.மயக்கும் மாயங்களை கொண்ட திரைக்கதை வடிவமைப்பின் மூலம் செதுக்கி கொடுத்ததற்காக இந்த மன்னிப்பு....
                   விக்ரமிலிருந்து குட்டி தேவதை வரை..குட்டி தேவதையிலிருந்து விக்ரம் வரை..படம் துவங்கி முடிந்து போகும் அசாத்தியமான அன்பின் நெகிழ்வை,உண்மையின் அடையாளத்தை தந்ததற்கு நன்றி..சிறிய கதாபாத்திரங்களை எல்லாம் கடந்து மன நோயாளிகளாக தேர்வு செய்த அந்த நால்வரும் அவர்களின் உலகமும் இன்னும் இன்னும் என என்னை மீட்டிக் கொண்டே போகிறது..நிலா நிலாவிடம் பேச சொல்வதை  தொடர்ந்த காட்சிகளின் மூலம் நிகழ்த்தும் ஓவியங்களை மைகளால் தீட்ட இயலாது..கதை சொல்லும் பாடலில் கொண்டிருக்கும் எல்லா உத்திகளையும் கவனிக்கும் போது.. யோவ்..இவ்ளோ நாள் எங்கையா இருந்த விஜய்..அப்பப்பா..
                       ஒரு தெளிந்த படைப்பாளியான நீ இது வரை செய்த எல்லா கதைகளும் எங்கிருந்தோ கலவாட்டப்பட்ட சாயலை தொலைத்தால் நீ உலகத்தின் முன்னால்  திரண்டு நிற்ப்பாய்..உன்னை புகழவோ ,இகழவோ  இயலாத அளவுக்கு என்னை மீட்டி சென்ற உனக்கும் உன் படைப்புக்கும் எப்போதும் நன்றிகள்..போயி கதைகளை தேடு..மனிதர்களிடம் படி..அதை விட்டு விட்டு திருட்டு வேளையில் மட்டும் ஈடுபடாதே..அது நீ அடைய வேண்டிய பெரும் புகழை,உன் அசாத்திய கலை நுணுக்கத்தை ,உன் திறமையை கொன்று விடும்......

பூச்சாண்டி 6  

Posted by நாண்

இராணுவ உடையணிந்த ஒரு பிணம் தின்னி பற்றி பேசப்போகிறேன்.. எனவே நையாண்டி எதுவும் இருக்காது.. அதை மட்டுமே விரும்புவோர் இருந்தால் தயவு செய்து இதை படிக்காமல் கூட விட்டு விடுங்கள்.. செய்தி என்னவெனில் சென்னை தீவுத்திடல் அருகே இருக்கிற இராணுவ முகாம் ஒன்றில் பதின்மூன்று வயது சிறுவன் ( தில்சன் ) இராணுவ வீரனால் துப்பாக்கியால் சுடப்பட்டான்.. முகாமில் இருக்கும் மரம் ஒன்றில் ஏறி பழம் பறிக்க முயன்றமைக்காக.. கையில் ஆயுதம் ஏந்திய நபர்களை அணிதிரட்டி சண்டை போடுவேனு சவடால் பேசுற பாபா ராம்தேவ் என்கிற பணக்கார இந்துத்துவ தீவிரவாதியை இந்த புடுங்கிக ஒண்ணுமே பண்ணல... ஆட்சியில் இருக்கிறவனும் சரி, ஆட்சியை பிடிக்க போராடுற ஒட்டு பிச்சைக்காரனும் சரி, அதிகார மையத்தில் இருக்கிற அதிகாரி பொறுக்கிகளும் சரி எவனும் ஒரு வார்த்தை கூட பேசல.. ஏன்னா அவன்கிட்ட காசு இருக்கு மதம் என்கிற கண்ணுக்கு தெரியாத கேவலமான இழி சக்தி இருக்கு... அவனை நக்கி பிழைக்க முடியும்.. ஆனா கேவலம் ஒரு ஏழை சிறுவன் கையில் கத்தியோ இல்லை கூர்மையான குண்டூசியோ கூட கிடையாது.. ஒரு பழம் பறிக்க ஆசைப் பட்டிருக்கான்.. அவ்வளவுதான்.. அத்து மீறி நுழைஞ்சுட்டானாம்.. கேவலப் பட்ட நாய்களே ... இங்க ஒவோருத்தனும் அத்துமீறி இருக்கவன் சுதந்திரத்தை பரிக்கிரதுல துவங்கி , மக்கள் சொத்தை கொள்ளையடிச்சு சேர்த்து வச்சுக்கிட்டு மக்களையே இலவசம்கிற பெயரால பிச்சைக்காரன் மாதிரி அலைய விடுறானுங்க.. அவனுங்கள எல்லாம் என்னடா செய்ஞ்சீங்க? சல்யூட் போட்டு இளிச்சுக்கிட்டு நிப்பீங்க.. ஏழை பையன்னா மட்டும் இளக்காரம்.. அப்புடித்தானே..

                                                                          உங்க கையில் துவக்குகளையும் அதிகாரத்தையும் நாங்க தந்தது எங்களை பாதுகாக்க மட்டும்தானே.. ஆனா காஷ்மீர்ல துவங்கி ராமேஸ்வரம் வரைக்கும் மக்களான எங்களுக்குத்தான் இம்சையை குடுக்குறீங்க.. எல்லை தாண்டுற தீவிரவாதி பயங்கரவாதி எல்லா நாய்களையும் இளிச்சுக்கிட்டே விட்டுடுங்க... எல்லை தாண்டி போயி ஏற்கனவே நொந்து செத்துக் கிடக்கிற எங்க மக்களை கொன்னு எங்க புள்ளைங்கள கற்பழிப்பீங்க.. ஆனா எல்லாத்தையும் பார்த்துகிட்டு நாங்க இளிச்சுக்கிட்டே எல்லா நாய்களையும் மாதிரி உங்களை போல நல்லவுங்க இல்லவே இல்லன்னு இராணுவ புடுங்கிகள் சினிமா எடுக்கணும்.. உங்க பெருமை மயிரை பறைசாற்றி துதி  பாடனும்..  அப்புடித்தானே..
                                                               தேவு......யா... மகனுங்களா.. எல்லாத்தையும் கூட மன்னிச்சுடலாம் ... நீங்க அங்க வெறும் கருவிதான்னு தேத்திக்கிறோம்.. ஆனா சந்தேகத்துல சுட்டுக்கொன்னதோட இல்லாம வாழை இலை போட்டு ஒரு முழு இரவும் நாயை விட கேவலமா பிணத்தை மூடி வச்சுட்டு , அடுத்த நாள் காலை அதை தூக்கி வெளில வீசியாச்சு.. அதை விட கேவலம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடக்குதுன்னு எல்லாரையும் நம்ப வச்சு நாடகம் ஆடி சாயங்காலம் ஒத்துக்கிறீங்க.. போராட்டம் பண்ணினா தூக்கிட்டு போயி உள்ள வைக்கலாம்.. அட பத்திரிக்கை துறை அறிவு ஜீவிகளே கனிமொழி கட்டாந்தரையில் படுக்கிறதை பத்தி கண்ணீர் கசிய எழுதுற எல்லாரும் இதை பத்தி ஒரு வார்த்தையாவது எழுதுங்க.. உங்களுக்கு புண்ணியமா போகும்.. நீங்களும் தமிழனுங்கதானே.. இந்திய இறையாண்மை , இந்திய தேசியம் மட்டும் பேசாதிங்க.. தமிழ் தேசியம் பேசுங்க.. இந்தியனா இருந்து நாம எல்லாத்தையும் பறிகொடுக்க இனியும் தயார் இல்லன்னு எல்லாருக்கும் புரிய வைங்க..
                அஞ்சு அறிவு மட்டும் இருக்கிற காக்கா குருவியை கூட பாது காக்கிற அமைப்புகளே தயவு செஞ்சு இந்த சீருடை அணிந்த பிணம் தின்னி சாத்தான்களை பற்றியும் குரல் கொடுங்க.. இல்ல எப்பவும் போல எதையும் செய்யாம நாசமா போங்க..