ஜூன் 26 இல் மெரினாவிற்கு போவது அப்படி என்ன தேவை?  

Posted by நாண் in , , , , , ,


ஈழத்தில் நம் உறவுகளை சிங்கள இனவெறி அரசு பல பத்தாண்டுகளாய் கொன்று குவிப்பதை கொள்கையாய் கொண்டு இயங்கி வருகிற, சிங்கள இனவெறிக்கு எதிராக பல்வேறு வகையில் போராடிவிட்டனர், போராடிக் கொண்டிருக்கின்றனர். இனவெறிக்கு எதிரான இத்தகைய போராட்டங்களுக்கு தமிழகத்திலும், புலத்திலும் தொடர்ந்து அதற்கான ஆதரவு அலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக தமிழக்த்தின் அரசியல் நரிகள் தின்று இன்று போதாமையில் வந்து நிற்கின்ற் அவல நிலையில் இருக்கிறோம். போராட்டங்களுக்கு, சுயமரியாதையின் பொருட்டு தன்னிச்சையாக திரள வேண்டிய இளைஞர்கள் கூட்டத்திடம் சென்று ஈழத்தில் நடந்த அவலத்தை பேச வேண்டிய சூழலில் இருக்கிறோம்.


நம் சமகாலத்தில் நடந்த அவலத்தை வலிந்து சென்று கையில் திணித்து துண்டு பிரசுரத்தின் வழி பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால், நமீதா "மச்சான்ஸ்" என்று சொன்ன செய்தி, த்ரிசா பாடிகாட் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி, அசின் பிகினி உடையில் நடிக்க ஒப்புக் கொண்ட செய்தி இளைஞர்களிடத்தில் தங்கு தடையின்றி போய் சேரும். தினதந்தி, தினகரன், மாலை மலர், மாலை முரசு என விதிவிலக்குகள் கிடையாது. இவனுங்க பத்திரிக்கை தொழில் நடத்துறானுங்களா, பேப்பர்ல விழிவழி விபச்சாரம் பண்ற தரகர்களான்னு கண்டுபிடிக்கிற அளவு நமக்கு சிக்கல். இதுல என்ன வேடிக்கைன்னா, நடிகை தொப்புளை தெளிவாக படம் பிடித்து போடும் பத்திரிக்கையில்தான் அழகிகள் கைது என்ற படச்செய்தியும் வரும். இந்த நாட்டுல இளைஞர்களுக்கு பாலியல் உணர்வை எவ்வளவு தூண்டனுமோ, அத்தனையும் தூண்டி விட்டு, விட்டு படுக்க மட்டும் இடம் தராது சமூகம், அப்பொழுதும் கலாச்சாரம் காக்க வந்துவிடும் இந்த விபச்சார பத்திரிக்கைகள்...

சமீபத்தில், இந்திய அதிகார வர்க்க விபச்சாரி மேனன் கம்முனாட்டி ஜெயா மாமியை சந்திச்சானாம். அந்த மேனன் வெங்காயத்தை பத்தி இங்கிருக்கிற பத்திரிக்கைகளுக்கு தெரியவே தெரியாதா? இவன் ஈழத்தமிழ் துரோகி என்று தெரியவே தெரியாதா? கேட்டா அந்த பொல்லாப்பு நமக்கு எதுக்கு, அரசு விளம்பரம் கிடைக்காதேன்னு ஒரு சால்ஜாப், ஊரறிந்த காரணம் வரும்.... ஏண்டா, தான் பொண்டாட்டி, புள்ள சேலையை உறிஞ்சாதான்........உங்களுக்கெல்லாம் கோபம் வருமா.... அப்ப காத்திருந்து டி.நகர் சேலை வாங்குங்கடா தாராளமா?

இது போதாதுன்னு, தொலைக்காட்சிகள் சொல்லவே வேண்டாம், நிழற்பட விபச்சாரம் செய்பவர்களுக்கு போட்டியாக, நிழல்கள் ஆடுவதை வைத்து, அதுவும் அரை குறையாய், நிறைவாய் குறைவாய் ஆடுவதை வைத்து விபச்சாரம்...

இப்படில்லாம் ரவுண்டு கட்டி விபச்சாரம் பண்ணா, மசிறாடா நாங்க இளைஞர்கள்கிட்ட போய் பிரச்சாரம் பண்ண முடியும்....
======================================================================
சரி பத்திரிக்கை காரங்க தொல்லை மசிறுதான் தாங்க முடியலைன்னு பார்த்தா.....
நம்ம அரைவேக்காட்டு அரசியல் வெண்ணெய்ங்களோடவும் பெருத்த தொல்லையா இருக்கு...

ஐநா என்னும் அமெரிக்க அடிவருடி அவை.....உலக மக்களின் துன்பத்திற்கு சாட்சியாக நின்று "வணக்கம் சார்" மட்டும் சொல்லும் அவை...

அந்த மசிற புடுங்குன அவை அமைச்ச ஒரு மயிர புடுங்காத கமிட்டி சில பரிந்துரைகளை செய்து...சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றது....அது, வெண்ண மயிரானையும் போர்க்குற்றவாளின்னு அறிவிக்கலை....போர்குற்றம் நடந்ததற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு போர்குற்றவாளிகளே நீதிபதிகளாக மாறி விசாரணையை நடத்த வேண்டுமென்று கூறியிருக்கிறது....

நாம் பட்டினி கிடந்தவனுக்கு வாசமும் சுவைதான் என்கிற ரீதியில் அப்படியே துள்ளி குதிச்சோம்...

அடுத்து ஈழத்து தாய், ஜெயலலிதா அம்மையார்...ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்..... சிங்கள அரசை போர்க்குற்றவாளின்னு அறிவிக்க மைய அரசு ஐநா மன்றத்தை வலியுறுத்தணும்...(இதுக்கு நடுவுல இந்திய அதிகார வர்க்கம் மனித உரிமை கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக முயற்சி பண்றானுங்கன்னு செய்தி கேள்விப் பட்டேன்...மேற்கொண்டு தகவல் தெரியல..எப்படி,எதன் வழியா தெரிஞ்சுக்க தோணும்...). சிங்கள வெறியர்களுக்கு உதவி செய்ய துடித்து, துடித்து உதவி செய்த காங்கிரசு கம்முனாட்டிகள் கால்ல மிரட்டி விழற தொனி தெரிஞ்சது.....முழுக்க திமுக சாடல்... இதுல புரட்சி மயிரான்.......விஜயகாந்த...காவிரி பிரச்சினையில் திமுக அரசு துரோகம் பண்ணிடுச்சுன்னு.....பேசுறார்(ன்). 10 ஆண்டு துரோகம் பண்ண அம்மா முன்னிலையில் என்பதுதான் ஹைலட்டு....

இதுமட்டுமா, என்றால் சாதிக்குள் நின்று கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் அறிவுஜீவிகள்.....மதத்திற்குள் படுத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் பேசும் ஓநாய்கள்..... அடக்குமுறைக்கு எதிராக இன்னொரு விதமான அடக்குமுறையிடம் சரணடைவதை அரசியல் யுக்தி என்று பிதற்றும் அரைவேக்காடுகள்.......என பல மண்டை குடைச்சல்...

இப்படி எல்லா திசையில் நம்ம உயிரை வாங்குற கம்முனாட்டி நாய்ங்களுக்கு நடுவில் தன்னலமற்ற ஓரளவு அரசியல் புரிதல் கொண்ட(அதற்கு மேலும் கூட இருக்கலாம்...)
தன்னலமற்ற இளைஞர்கள் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு மக்களிடம் சென்று குறைந்த பட்சம் மெரினாவில் அணிதிரளச் சொல்லி அழைத்திருக்கிறாள்...

குறிப்பாக சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்கள் கண்டிப்பாக இந்த அணிதிரள்விற்கு வரவேண்டும்...அதுவும், தங்கள் கட்சி கொடி, கரைவேட்டி இல்லாமல்.... இல்லையென்றால் வேட்டியை கழட்டிட்டு தயவு செஞ்சு ஓடிடுங்க......

உங்க பிழைப்புவாதத்திற்கு தமிழ்த்தேசியத்தின் கோவணத்தை அவிழ்க்காதீர்கள்.

================================================================

இவ்வளவு பேசுற நீ என்ன மசிறுக்குடா இணையத்துல எழுதுக்கிட்டு இருக்கிறே, மக்கள்கிட்ட போக வேண்டியதுதானே என்ற கேள்வி வரலாம்....என்னால் இயன்றதை கண்டிப்பாக செய்வேன்....இதை படிக்கும் என் நண்பர்கள் அல்லாத தோழர்களும்....தயவு கூர்ந்து............தம்மால் இயன்ற அன்பர்களை அழைத்துக் கொண்டு மெரினாவிற்கு வாருங்கள்.................

தொடர்புகளுக்கு: தோழர் உமர்: 9600781111, தோழர் ஸ்டாலின்:9884877487

போங்கடா ..நீங்களும் உங்க சினிமாவும் .......  

Posted by நாண்

                               இது விளையாடும் நேரம்..என் மன கிணறில் தூர்ந்து போய் தொங்குகிற சினிமாவை பற்றி பேசி விடக்கூடிய சூழல் எனக்கில்லை..ஆனாலும் சில பதிவுகள் தேவையிருப்பதன் பொருட்டு கொட்டிவிட தீர்மானிக்கிறேன்..


                     காலம் என்னை மாற்றியமைக்கலாம்..நான் காலத்தின் சுழலில் சிக்கி கொள்ளலாம் .அப்போது நீங்கள் என்னை நோக்கி இந்த பதிவை முன் வைத்து கேள்வி கேட்கவோ வெட்டி போடவோ உரிமையுண்டு என்ற ஒப்புதலுடனே இதை எழுதுகிறேன்..

                    மிக கடினமாக கடந்து வந்த எனது திரைப்பாதை பச்சை என்கிற காத்து என்ற படத்தின் மூலம் தீராத மன வடுவை சந்தித்திருக்கிறது..கோபத்தில் கொப்பளிக்க துவங்கிய மனம் இன்று அதையே ரணமாக கொட்டுகிறது..இந்த பதிவில் சமூகம் தவிர்த்து பேச விரும்பாத நான் சுய புலம்பலை செய்யும் அளவுக்கு நீர்த்து கிடக்கிறேன்..

                 ஒப்பனையில்லாத வாழ்வை சுமக்க ஆசை கொண்டு ஒப்பனையான வாழ்வை தேடிக்கொண்டவன் நான்..

                முகம் ஒன்று கூற..பேச்சு ஒன்றாய் நீடிக்கும் கழுகுகளின் மத்தியில் திரை விரிந்திருக்கிறது..கற்பனைகளை விட சரியாக சொல்லப்படும் எதார்த்தம்  மேலானது என்ற என் புரிதலை சமீப முன்கான் திரையரங்குகளின் பார்வையாளர்கள் உடைத்தேரிந்தபோது துவளாத எல்லோரின் பேச்சிலும் வேறு ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது..


                 நீ தலித் மகனா என கேட்க விரும்ப வில்லை இந்த உலக சூழல் ..தேவரின் மகனென்றால் படம் அற்புதம் என்னும் மாயையை என்னென்று சொல்வது ..எல்லா தரப்பு மனிதர்களையும் கேட்டு அறிந்து கொண்ட சினிமா..தேவரின் பிள்ளைஎன்றால் மட்டும் தான் வெளியாக வேண்டுமா என்ன..அதிலும் சில அரசியல் பின்புலத்தை சமீபமாக உட்கொண்டவனிலிருந்து,காலம் தோறும் உட்கொண்டவன் வரை அப்படியென்ன தேவர் மோகம்..

                   நான் படைக்க வந்தேனா..இல்ல சாதி சான்றிதழ் வைத்து பிழைக்க வந்தேனா.. இப்படியே நீடித்து கிடந்தால் துவக்கு ஈழத்தில் மட்டுமல்ல இங்கேயும் வெடிக்கும் ..

                  கேவலமாக நடக்கும் இந்த கூத்துக்களை எவனும் பேச மாட்டான்..நான் பேசுவேன்..உதவி இயக்குனர் வாய்ப்பிலிருந்து கிடைத்த தயாரிப்பாளர் வரைக்கும் இங்கே புறக்கணிக்கப்பட்டவன் நான்..

                 ஒன்று கிடைக்க ஒன்றிலிருந்து ஒன்பதாய் கிளைத்தெழ   ஆசை கொண்ட நான் இன்று முனை மழுங்கி நிற்கிறேன்..காலத்தின் சூழலில் என் தன்னிலை தொலைத்து பெரியாரின் பேரன் என்று சொல்லி கொண்ட நான் பெண்ணை என் படம் வெளியாக தூதனுப்பவும் தயாராகி விட்டேன்..

                ஒரு தேர்ந்த சூதாடிக்கு மட்டுமே இந்த திரை சரி..கேவலப்பட்ட இந்த திரையில் நான் சந்தித்த எல்லோருமே ஏதோ ஒரு வகையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள என்னை களவாட முற்படுபவர்களே..
         
                 அவரவருக்கான ஆசைகளுக்கு ஒட்டு மொத்த படத்தை சுமந்த நான் மட்டுமே பலிகடா என்னும் அவலசுவையையை தினமும் ருசிக்கிறேன்..காலத்தின் நுனிகளில் என் கனவுக்கோட்டைகள் தகர்வதை இனி உங்களோடு நானும் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்..அவரவர்களுக்கான அவரவர்களின் அன்பிற்காக நான் எனது அன்பையும் எனது குடும்பத்தையும் பலியிட்டு விட்ட ஆதங்கத்தின் கூறுகளில் என் ஆன்மா தவிக்கிறது..சக மனிதனாக எனது நேசிப்புகள் சுருங்கிக் கொண்டே போகின்றன..


                சில நண்பர்களின் அதீத புரிதல் மட்டும் நீளாவிடில் தற்கொலை என்னும் மாய வலைக்கு நான் இரையாகி இருப்பேன்..ஆகவே என்னை யாரும் மன்னிக்க வேண்டாம்..என் படம் வெளியாகும் தினத்தில் அதை பார்க்கும் போது  நான் கட்டி வைத்திருந்த எனது வரையறை நழுவி திரை தோறும் புழுக்கள் ஆக்கிரமிக்கும்..என்கிற வேதனையோடு இப்பதிவை முடிக்கிறேன்..


பூச்சாண்டி 5  

Posted by நாண்

அய்யயோ புள்ளை புடிக்கிற பூச்சாண்டின்னு யாரும் பயந்து போயிராதிங்க.. இவர் பெரிய சாமியாரு... எல்லாருக்கும் யோகா சொல்லித்தரவரு.. நாட்டுக்கே இவர நல்லா தெரியும்.. பேரு பாபா ராம்தேவ் ... தொழில்.. நேத்து வரைக்கும் இந்துத்துவா பேசிக்கிட்டு,யோகா பயிற்சி வகுப்பு எடுத்துக்கிட்டு ஆன்மிகம் பேசி ஊரை ஏமாத்துறது.. இன்னைக்கு?! இவரு பெரிய ஹீரோ தெரியும்ல.... லஞ்ச ஒழிப்புக்காகவும் , பதுக்கப்பட்டு கிடக்கிற கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதற்கும்  உண்ணா விரதம் இருக்காரு.... அதுவும் அடையாள உண்ணாவிரதம் கிடையாது..சாகும் வரை உண்ணா விரதம்(யார் சாகுற வரைக்கும்னு சத்தியமா எனக்கு தெரியாது)    
உண்ணா விரதமிருக்க அவர் கூறிய வாதங்கள்,கருத்து யுத்தங்கள், அரசியல்வாதிகள் மீது அவர் சாடும் குற்றச்சாட்டுகள் எல்லாத்தையும் அப்புறமா பேசுவோம்.. அதுக்கு முன்னாடி இவர் யாருன்னு பேசுவோம்... இவரை பத்தி பேச என்ன இருக்கு?பாவம் சாமியாரு அதும் யோகா சொல்லி தர்றவருன்னு யோசிக்காதிங்க... இவர் யோகா சொல்லி தார சாமியாருதான்.. ஆனா யாருக்கு? உங்களையும் என்னையும் மாதிரி சாமானியனுக்கா?! அட கிறுக்கு பய மக்கா..(என்னையும் சேத்துத்தான் .. ஏன்னா நானும் முதல்ல உங்கள மாதிரிதான நினைச்சேன்...) நாம நினைக்கிரத்து ரொம்ப தப்பு... இவரோட வகுப்புல முதல் வரிசையில உக்கார கட்டணம் எவ்வளவு தெரியுமா? ஐம்பதாயிரம் ரூபாய்.. ஒரு மாசத்துக்கான கட்டணம் இல்ல.. ஒரு வகுப்புக்கான கட்டணம்..(ஒரு வகுப்பு என்பது ஒரு வாரம் வரை..) என்ன மூச்சு அடைக்கிறது மாதிரி இருக்கா? பொறுங்க.. அவர் வகுப்புல கடைசி வரிசையில் உக்கார கட்டணம் எவ்வளவு தெரியுமா? குறைந்தது முப்பதாயிரம் ரூபாய்... இப்போ கண்ணையும் கட்டுதா?


                                            இன்னொரு முக்கிய செய்தியும் இருக்கு... இவர் பசுவை கொல்றது குத்தம் அதை தடை செய்யணும்,மாட்டு கரி திங்குறவன் எல்லாம் தண்டிக்க படனும் அப்புடின்னு தொடர்ந்து போராடி வருகிற நபர்.. இந்த ஆளு எவ்வளவு கபடதாரி என்பதற்கு இதுதான் பெரிய சான்று.. என்னனு கேக்குறிங்களா? இவரோட மருந்து தயாரிக்கிற நிறுவனத்தில விலங்குகளோட உறுப்புகள்,கொழுப்புகள்,மனித எலும்புகள் எல்லாத்தையும் சேர்த்துதான் மாத்திரை மருந்துகள் எல்லாம் தயாரிக்கிறாரு.. இதை நிரூபிக்கவும் செஞ்சுருக்காங்க... இப்போ தெளிவா புரியுதா.. அயோக்கியன்கள்லயே உலக பெரிய அயோக்கியன் இந்த ஆளுதான்..


                                                                 இந்த அயோக்கியந்தான் இப்போ எல்லா அரசியல் அயோக்கியனுக்கும் கருப்பு பண முதலைகளுக்கும் எதிரா சாகும் வரை உண்ணா விரதம்னு களம் இறங்கியிருக்கான்..அந்த உண்ணா விரதப் பந்தல் அமைக்க செலவான தொகை மட்டும் இரண்டு கோடி ரூபாய்.. தினசரி தண்ணீருக்கான செலவு மற்று கழிவறை வசதிகளுக்கான செலவு எட்டு கோடி ரூபாய்.. இரண்டு லட்சம் பேர் இந்த உண்ணாவிரத பந்தலில் அமரமுடியும்..   அதுல பெரிய நகைச்சுவை என்னன்னா இந்த இடத்தை இவன் என்ன சொல்லி வாங்கி இருக்கிறான் தெரியுமா?..
                                                                             
                                                              இரண்டு லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் யோகா வகுப்பு எடுக்க வேண்டும் என்று..  திடீர்னு அந்த பந்தலை உண்ணா விரத போராட்ட இடமா மாத்தி இவன் மக்கள் நலன் பத்தி பேசுறதுதான் உலகின் மாபெரும் காமெடி.... இதுல இருந்தே புரியல..?! இவன் அடுத்த திட்டம் என்னன்னு.. வேற என்ன அரசியல்தான்.. ஆட்சி அதிகாரம்தான்.. அப்புறம் என்னா கழுதைக்கு இத்தனை வருசமா சாமானியன் மேல இல்லாத அக்கறை பொத்துக்கிட்டு ஓடி வருது... பாருங்க மக்களே..
            
                                              நம்ம நிலைமை எவ்வளவு கேவலமா போயிருச்சு பாருங்க... நாம கடவுள் மேல வச்சிக்கிற பக்தியையும் ஆன்மீகவாதிகள் மேல வச்சிருக்கிற மரியாதையும் தவறா பயன்படுத்தி பணம் சம்பாதிச்சு குமிச்சதோட இல்லாம ஆட்சி பீடத்துலயும் உக்காந்து நம்மள சாகடிக்க எம்புட்டு விவரமா நடிக்கிறான் பாருங்க... இவன என்ன செய்யலாம்...? நீங்களே சொல்லுங்க...