காற்றின் வாசனையை தேடி...  

Posted by நாண்

                        நினைவு தொடங்கிய நாட்களின் மௌனத்தை உடைக்கும் முகமாக துவங்குகிறது மன சாலை ...தேவைகள் சிறிதும் பெரிதுமான சாலைகள் அவை..பேச்சின் கன்னியில் சொற்கள் சிதறி கிடந்தன ..                                                                  அருபத்தின் வாசல்கள் எனக்கான கதவை அடைத்து வைத்திருந்தது..இனி செய்வதற்கு ஒன்றுமில்லை ..ஆசையாய் சேகரித்த மகனை ஏகலைவன் என பெயர் சூட்டி வில்லேந்த வைக்க நினைத்த போராளியை சாம்பலாக்க விரும்பாமல் நான் விளையாடிய எனது குடிசையில் புதைத்தேன்..அவனுக்கான ஆன்மாவும் வில்லும் தூங்கவிடாமல் செய்த இரவை கிழித்தபடி என் வீட்டு உத்திரத்தில் தொங்கியபடி என்னையே ஏக்கமாக பார்த்தது..                                                                                                                                                            அப்பொழுதுதான்..காலையில் இருந்து தேங்கி அடங்க மறுத்த எனது கண்ணீர் கேவலோடு வானத்தை கிழித்தபடி கொட்ட துவங்கியது...


மீளாத அந்த கொடிய இரவில் நானும் வரலாற்று பக்கங்களில் தன கை விரல் வெட்டி கொடுத்து ஆதிக்க மாலுமிகளுக்கு உலக பெயர் வாங்கி கொடுத்த ஏகலைவனும் பேசிக்கொண்டோம் ..இரு வேறு காலங்களும் அந்த நீண்ட இரவை நிரப்பி இருந்தன..என் அருகில் தூங்கிக்கொண்டிருந்த துணையின் முகத்தில் இருந்த உப்பு கோடுகள் அவ்வப்போது எங்களின் விவாத பொருளாகியது..கட்டை விரல் கேட்க துணிந்த துரோணருக்கு காடு பறிபோவது பற்றிய அக்கறை இன்றைய சிங் கிற்கு இல்லாதது போலவே,அவருக்கும் இல்லாதிருந்ததை ஏகலைவனுக்கு சுட்டி காட்டினேன்..அவன் வெகுண்டழுந்து காட்டை காக்க தன் குடிகளை தயார் செய்தது பற்றி சொன்னான்..                                                                                                                                   ஓயாத அந்த எழுச்சியின் நீட்சி அரச படைகளுக்கு எதிராக காலம் தோறும் தொடர்வதையும் மக்களிடம் புரட்சியின் விதைகள் மழுங்கி பின் எழுவதுமான சுழற்சி பற்றி தொடர்ந்து பேசினோம்..கதிர்கள் மெல்ல சூரியன் வரும் திசை நோக்கி தனது தலையை திருப்பின..என் மனம் உறங்க தொடங்கியது.


This entry was posted on Sunday 22 May 2011 at 05:54 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment