கைக்கு அடக்கமா பொண்ணு...  

Posted by நாண்

சமீபத்தில் ஊருக்கு சென்று இருந்தேன்.. ஒரு நண்பரை எதிர்பாரா விதமாக எதிர்கொள்ள வேண்டி வந்தது.. வழக்கமான நல விசாரிப்புகள், தொழில் பற்றிய விசாரணைகள் எல்லாமும் இனிதே முடிய கடைசியாக அவரது கேள்வி திருமணம் எப்போது?... பெண் தேடுகிறேன்.. விரைவில் கிடைப்பின் மிக விரைவில் திருமணம் என்றேன்.. 'அப்புடி என்ன உலகத்துல இல்லாத பொண்ணு தேடுற?' என்றார்.. உலகத்துல இருக்குற பொண்ணுதாங்க தேடுறேன். கை நிறைய காதலும் கண்கள் நிறைய கனவுகளும் கொண்ட பெண்ணை தேடுறேன் என்றேன் நான்... அதற்க்கு அந்த நண்பர் கொந்தளித்தோ,கொதித்தோ, இல்லை ஏளனமாகவோ அதுவும் இல்லேன்னா வேற ஏதோ ஒரு இளவா சொன்னாரோ தெரியல.. 'என்னய்யா பேசுற.. கை நிறைய காசு இருக்குற கைக்கு அடக்கமான பிள்ளையா பாத்து கல்யாணம் பண்ணனும்யா.. அவதான் நம்ம கால சுத்தி கிடப்பா..' அப்புடின்னாரு.. தயவு செஞ்சு நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்.. எனக்கு அவர அடிக்கணும் போல இருந்ததால அடிக்கிற மாதிரியே ஒரு வார்த்தை சொன்னேன்.. அது என்னனு கடைசியா சொல்றேன்.. படிச்சுட்டு தப்பா சரியானு சொல்லுங்க.. ............................................................................
'கைக்கு அடக்கமா கர்ச்சீபுல இருந்து கத்திரிக்கா வரைக்கும் நிறைய இருக்குடா வெண்ணையாண்டி.. காசு ஏடிஎம் மிசின் வச்சுருக்கு.. நெளியிற பாம்பு கூட கால சுத்திதான் கிடக்கு.. எதையாவது கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துங்கடா வெளக்கெண்ணைகளா.. அதுக்கு ஏன் உசுரும் ஆறு அறிவும் சொரணையும் இருக்கிற பொண்ண கல்யாணம் பண்றீங்க? நீங்க மட்டும் இல்லாம உங்க சந்ததி முழுக்க உங்கள மாதிரியே ஆளுங்களையா  உருவாக்கி ஒரு  சாதி,மதம்னு குட்டி வளையத்துக்குள இழுத்து விடுற முன்மாதிரிகளா உருவாக்குறீங்க.. நீங்கல்லாம் இருந்து கெடுக்கிறதுக்கு அரை முழ கயிறு வாங்கி நாண்டுக்கிட்டு தொங்குங்க.. எங்க புள்ளைங்க நிம்மதியா படிக்கும், தப்பான ஆளை அடிக்கும்,ஈழத்து புலிகளை போல தமிழ் தேசிய விடுதலையை முன்னெடுக்கும், முக்கியமா உங்கள மாதிரி ஆளுங்க உயிரையும் எடுக்கும்.. உங்கள கெஞ்சி கேக்குறேன் செத்து போங்களேன்..' 

This entry was posted on Tuesday 24 May 2011 at 13:09 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment