மனித தன்மை பேசி ..மானுடம் கொல்லும் சிலருக்கு ..  

Posted by நாண்

 

                    நான் முதலில் என்னிலிருந்தே துவங்குகிறேன் ..எனக்கான சிறுவயது விளையாட்டுக்கள் அற்பமானவை ..பக்கத்து வீட்டு பையனை கில்லி விட்டு ஓடுவது,,அண்ணனின் பையிலிருந்து பணம் திருடி சினிமா பார்ப்பது இப்படி தொடர்ந்த வாழ்வில் சிறு சிறு மாற்றங்கள் ..                                         வாழ்வும் எனக்கான மனிதர்களுமாக காலம் பெரியாரையும் அம்பேத்காரையும் உள்வாங்க தொடங்கியிருந்த நேரம் ..அப்போதும் கோயிலுக்கு போவது..அய்யர்களை எப்போதும் வணங்குவது என தொடர்ந்து கொண்டிருந்தது..கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் விழைந்தது ..அதே போலவே பல சிந்தனைவாதிகளின் வாழ்வும் அவர்கள் ஆயுதம் தேடும் போது தனது தெரு சண்டைக்கு பயன்படுத்திக் கொண்டதும் நிகழ்ந்தது ..முழுமையாக உள்வாங்கல் நடப்பதற்குள் சில சம்பவங்கள் உற்ற நண்பருடன் கூட நிகழ்ந்தது ..                                                                                                                                                                        ஆனால் காலம் முழுவதும் அதை சொல்லியே அவர்களின் சீரிய போக்கை விமர்சிக்கும் காவல் துறை குணம் அவர்களிடமிருந்து வெளியேறி பின் தன்னையே தனக்கு தலைவனாக அறிவித்துக்கொண்டு சிலரால் செய்ய முடிவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது..பெரியார் நாயக்கராக பிறந்த போதும் பின்னாளில் மானுடம் விளங்க வாழ்ந்த போதும் நாம் அவரை வழிகாட்டியாக மதிக்கிறோம் நமக்கு ஆதாயம் இருக்கும் பட்சத்தில்..ஆனால் இரத்தம் சிந்தி போராடிய புலிகளை மற்றும் வசதியாக சிலரால் ஏற்று கொள்ள முடியாமல் போகிறது ..அவர்களுக்கு வசதியாக சகோதர யுத்தம் கண்ணில் பட்டு விடுகிறது ..புலிகள் இல்லாமல் திராவிட இயக்கங்கள் வளர வில்லையா அதை போல ஆளாளுக்கு இயக்கம் ஆரம்பித்து ஈழம் மீட்க வேண்டி தானே..வாய்ச்சவடால் ஏன்.

This entry was posted on Sunday 22 May 2011 at 06:02 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment