பச்சை என்கிற காற்று..நிரம்பி வழியும் வலிகள்…  

Posted by நாண்

பச்சை என்கிற காற்று..நிரம்பி வழியும் வலிகள்…

சினிமா அறிவியல் ஊடகம் , மக்களோடு நேரடியாக உரையாட வாய்ப்பு அமைத்து தரும் களம்,  எம்.ஜி. ஆர், கருணாநிதி, ஜெயா  என இன்றைய தமிழனின் அரசியலை தீர்மானிக்கிற ஆளுமைகள் உருவாக்கிய களம்  என தங்களுக்கு சொல்லப்பட்ட அல்லது சினிமாவுக்கு வெளியே நின்று...
சினிமா அறிவியல் ஊடகம் , மக்களோடு நேரடியாக உரையாட வாய்ப்பு அமைத்து தரும் களம்,  எம்.ஜி. ஆர், கருணாநிதி, ஜெயா  என இன்றைய தமிழனின் அரசியலை தீர்மானிக்கிற ஆளுமைகள் உருவாக்கிய களம்  என தங்களுக்கு சொல்லப்பட்ட அல்லது சினிமாவுக்கு வெளியே நின்று கருத்துரைகளாக கேட்டு பழகிய பிம்பங்களில் நின்று பழகிய தமிழ் அன்பர்களிடம் இதுவரை ஊடகங்கள் நேர்மையாக பதியாத வழிகளை கூடுதல் நேர்மையோடு தங்களிடம் பேச வருகிறார் தோழர் இயக்குனர் கீரா. ” பச்சை என்கிற காத்து“  என்ற திரை குழந்தையை இவர் பிரசவித்த வழிகளை, வலிகளை தங்களிடம்  பகிர்ந்து கொள்ள இசைவு தெரிவித்திருக்கிறார். மனைவியின் பிரசவ வழியை கூட அக்கறையற்று கடந்து போகும் சமூகத்திடம்தான் பேசப் போகிறார் என்று தெரிந்தேதான் பேச துணிந்திருக்கிறார். உங்களோடு சேர்ந்து நாங்களும் எமது செவிகளை கூர்மை படுத்தி கொள்கிறோம்.
==============================================================================
காற்று.1
நீங்கள் ஒரு சினிமா பைத்தியமா..?
நீங்கள் வாழ்வை சந்தோசமாகக விரும்புவரா..?
நீங்கள் வலிகளை உணர்ந்தவரா..?
நீங்கள் சாதிக்க விரும்பியவரா..?
நீங்கள் தோல்வியை அனுபவித்தவரா..?
இப்படி எல்லாவட்டிரிலும் ஏதேனும் ஒன்று உங்கள் வாழ்வில் நுழைந்திருக்குமானால்..நானும் உங்களில் ஒருவனாக அறியப்படுவேன்..என் பெயர் மூர்த்தி.. பிணத்தை கொத்தித்தின்னும் கழுகு போல சினிமா என்னை கொத்தி தின்றதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலில் எழுதுகிறேன்..
ரதி ..இங்கிருந்துதான் நான் துவங்குகிறேன்..யாரும் அறியாத பொழுதொன்றில் என் மீது நம்பிக்கை கொண்டு விழுந்த விதை அது..தாயின் கருவறையை போல பல வருடங்கள் என்னுள் உருத்திரண்டு கொண்டிருந்தது..அதற்க்கு கைகளையும் கால்களையும் நான் பார்த்த மனிதர்களில் இருந்து புதுப்பித்து கொண்டே வந்தேன்..நான் வாழ்ந்த சூழலுக்கு பழக்கப்படுத்தியிருந்தேன்..ரத்தினமும் திலகாவும் என்னை நிரப்பியிருந்தார்கள்..ஆனாலும் வயிறு பசிக்கத்தான் செய்ததது..குடும்பத்தை விட்டு நான் புழுதியேறிய தெருவை விட்டு, என் அன்பையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களை விட்டு புறாக்கூன்டுகளை போல எச்சமும்.குப்பையும் மனக்கிடன்கெங்கும் வழிந்த சென்னை நகரத்திற்குள் வந்ததிலிருந்து..இந்த பசியும் என்னோடு ஒட்டிக்கொண்டது..உதவி இயக்குனராய் சேர்வது என்பது அத்தனை எளிதல்ல என்கிற சூத்திரத்தை நான் சிறு வயதிலிருந்தே கற்று வந்தவன் தான் ஆனாலும்..ஒரு வேலை உணவுக்கே தாளமிடுவோம் என நினைத்து பார்க்கவில்லை..

This entry was posted on Saturday 21 May 2011 at 11:19 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment