கல்வியை தின்னும் பச்சோந்திகள் ..  

Posted by நாண்



                      சமச்சீர் கல்விக்கு விழுந்தது ஆப்பு..
காரணம் தரமாக இல்லையாம் ..புதிய அரசு புரட்ச்சிகரமாக ஒன்றை கண்டு பிடித்து விட்டது..
                                கிட்டத்தட்ட மொழியியல் வல்லுனர்களாலும் தேர்ந்த பேராசிரிய,ஆசிரிய குழுமங்களாலும் கண்டடைந்த பாடப்புத்தக  வடிவம்..புதிய அரசுக்கு ஏற்ப்பானதாக  இல்லையாம்....புதிய அரசுக்கு இது ஏன் ஏற்ப்பானதில்லை என்றால் கருணாநிதிஅந்த புத்தகம் முழுக்க  தன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறார் ..அதுதானே..நான் கேட்கிறேன் எந்த அரசுதான் அவர்களை அவர்களே புகழ்ந்து கொள்ளாமல் இருந்தன..அதையும் அடுத்த வருடத்திற்குள்  மாற்றி விட இயலாதா..?அவ்வளவு கடினமான வேலையா இது..
                   
                             கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வெளி வந்தும் விட்டன..அதையே எத்தனையோ பெற்றோர் வாங்கியும் விட்டனர்..இப்படி இருக்கையில் அரசு சாமார்த்தியமாக மறைக்கிறது.. இதில் கருணாநிதிக்கு ஆதரவான கருத்து இருப்பதால் மட்டுமே ஜெ எதிர்க்கிறார் என்ற மாய வலையை தாண்டி உண்மை வேறு தளத்தில் இயங்குகிறது.மெட்ரிக் உரிமையாளர்களும் தனியார் கல்வி அமைப்புகளை வைத்திருக்கும் கபோதிகளும் தங்களது பணக்கொல்லைக்கு எதிராக உருவாகி வரும் சமச்ச்சீர் கல்வியை தடுத்திருக்கிறார்கள் ..


                            ஆட்சி மாற்றத்தின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிற முதல் பேரிடி..கிராம மாணவர்களும் நகர மாணவர்களுக்கும் தொன்று தொட்டு ஒரு மிக பெரிய கல்வி இடைவெளியை உருவாக்கிய ஆரிய வர்க்கம் ,தொடந்து தனது மனநிலையை காட்டி வருகிறது..எல்லா தரப்பு மாணவர்களுக்கும் ஒரே சீரான கல்வி கொடுப்பதால் ஏற்படும் மாற்றத்தை சகிக்க முடிய வில்லை ஆட்சியாளர்களால் ..

           எப்போதும் ஊழல் பற்றி பேசினால் தலித் எனவும் பெண் எனவும் ஊளையிடும் ,கருனாநிதிகளால் நல்லதிட்டங்கள் போகும் பொது மட்டும் குரல் கொடுப்பதே இல்லை..

                              எத்தனையோ வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய சமச்சீர் முறை காலம் கடந்து சமூகமே பெரும் மனச்சிக்கலில் தன குழந்தை மீதான வாழ்வியல் தேடலில் சிக்கி தவிக்கும் பொது வந்திருக்கிறது..அதற்கும் கேவலன்கேட்டவர்களால் ஆப்பு விழுந்திருக்கிறது..

This entry was posted on Monday 23 May 2011 at 04:50 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment