புலம் பெயர்ந்த காடுகளும் நதிகளும்...  

Posted by நாண்

 
                  கொச்சையாக பேசி பழகிய எங்களின் மொழி நாகரிகத்திற்கு மாற்றமடைந்ததுமே நாங்களும் மாறிப்போனோம் ..                                                           சொல்லப்படாத அணங்குகள் சொல்லப்படாமலே எங்களால் அழித்தொழிக்க பட்டன ..வெள்ளையாக இருப்பது மட்டுமே வாழ்வதற்கான நியதி என எம் அரசர்கள் எங்களுக்கு சொல்லி இருந்தார்கள் ..அதற்க்கான சூத்திரங்கள் உலக நாடுகளிடமிருந்து நதிகளை விற்று வாங்கினோம் ..சிற்றோடைகளை கூட தாரை வார்த்து கொடுத்தோம் ..                     அதன் மூலம் மெலிதான கரு வெள்ளையை பெற்றோம் ..ஆனாலும் ..மனிதர்களாக முடிய வில்லை ..தொடர்ந்து எங்களின் மூதி நீலியை கழுத்தை அறுத்து கொன்று வெள்ளை காக்கைகளுக்கு இரையாக போட்டோம் ..அப்போது நல்ல மாற்றம் இருந்தது ..                                                                                                 சந்தோஷ மிகுதியால் எங்கள் காடுகளை அனுமானை விட்டு பெயர்த்து எடுத்து வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க அரசர்கள் சுற்றி பார்க்க கொடுத்தோம் ...அதன் பிறகு மிச்சமிருந்த பறவைகளும் வனத்தின் அழியா பழங்களும் தொலைந்து போகின..நிரம்பி சிரித்தோம் எல்லாம் கொடுத்தோம் இனி வெள்ளையாக வேண்டியதுதான் பாக்கி ..                                                                                                                                                          அப்போது பெரும் கூச்சல் எங்களை உணவு வடிவத்தில் கொல்ல முயன்றது ..நாங்கள் எங்கள் வெள்ளை இனத்தலைவரான சிதம்பரத்திடம் ஓடினோம் ..அவர் சொன்னார் நீங்கள் நினைத்தபடி வாழ வேண்டுமானால் உணவை தின்பதை கேவலாமாக கருத வேண்டும் அது தான் உலக தலைவர் அமரிக்க தளபதி விரும்புவார் ..நாங்களும் அதன்படியே வாழ முயன்றோம்..எம் சந்ததிகள் மட்டும் செத்து போனது ..கவலை வேண்டாம் நமக்கு நமது தலைவர் சிதம்பரம் நல்ல பட்டம் சுட்டி மகிழ்வார் ...சிரித்துக்கொண்டே வாங்கிக்கொள்வோம் பரதேசி என்ற அந்த மாபெரும் பட்டத்தை..

This entry was posted on Sunday 22 May 2011 at 05:48 . You can follow any responses to this entry through the comments feed .

0 கருத்துரைகள்

Post a Comment